முகப்பு
வான்வழித் தாக்குதல்
உலகம்

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் குறித்து..

உலகம்

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் குறித்து..

Updated On : 2 மார்ச், 2026 at 7:09 AM
வான்வழித் தாக்குதல்
பகிர்:

லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,

ஹெஸ்பொல்லா இஸ்ரேலைத் தாக்கிய நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துகிறது. லெபான் மீது இன்னும் தீவிரமான தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு லெபனானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், குவைத் தொடர்ந்து தாக்குதலை எதிர்கொண்டதால், அங்குள்ள அமெரிக்கர்கள் வீட்டிற்குள் இருக்குமாறும், மேலும், அவர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீதான போர் பதற்றத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. காஷ்மீரில் அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனிடையே கர்நாடகத்தில் அயதுல்லா கமேனி வருகை தந்த கிராமத்தில் மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

summary

Israeli airstrikes on Lebanon after Hezbollah attacked Israel have killed at least 31 people, Lebanon's Health Ministry said on Monday.

முழு கட்டுரையைப் படிக்க →