இந்தியா

அமெரிக்காவில் ஏரியில் விழுந்த இந்தியர் இறந்து விட்டதாக அறிவிப்பு!

பணிபுரிய சென்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

DIN

அமெரிக்காவின் ஏரியில் விழுந்த இந்தியர் இறந்து விட்டதாக அமெரிக்க காவல்துறை அறிவித்தது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 26 வயதான சித்தாந்த் வித்தல் படேல், அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிய சென்றிருந்தார். அவர், கடந்த வாரம் (ஜூலை 06) அமெரிக்காவின் தேசியப் பூங்காவில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, அருகிலிருந்த ஏரியில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தோர் சித்தாந்த்தை காப்பாற்ற முயன்றும், அவர்களால் முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, சித்தாந்த்தின் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்து, தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது குடும்பத்தினரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் அமெரிக்காவைத் தொடர்புகொண்டு, சித்தாந்த்தை மீட்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சித்தாந்த்தின் உடலையும் தேடியும் கிடைக்காததால், அவர் இறந்திருக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் சித்தாந்த்தின் நண்பர்கள் கூறுவதாவது, அவரது உடல் நீருக்கு அடியில் சிக்கியிருக்கலாம். தொடர்ந்து தேட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT