முகப்பு
இந்தியா

ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி!

நோயாளியை அழைத்துச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Updated On : 13 ஜூலை, 2024 at 7:23 AM
பாகிஸ்தானில் சாலை விபத்து: 6 பேர் பலி 
பகிர்:

மேற்கு வங்கத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்திலன் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில், அபர்ணா என்ற நோயாளியை, கிர்பாயில் உள்ள மருத்துவமனையில் இருந்து மெடினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அபர்ணாவின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது, ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அபர்ணாவின் குடும்பத்தினர் நான்கு பேர் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருப்பினும், அபர்ணாவும் ஆம்புலன்ஸ் டிரைவரும் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்தாரா? அல்லது இரண்டு வாகனங்களிலும் பழுது ஏதேனும் இருந்ததா? என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →