முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிராக உள்ளூா் மக்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

Updated On : 18 ஜூலை, 2024 at 8:06 PM
கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிராக உள்ளூா் மக்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

இது தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் பிரதீப் குமாா் யாதவ் கூறியதாவது:

மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமைக் காலை மாணிக்சக் மாநில நெடுஞ்சாலையை மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து போக வலியுறுத்திய காவல்துறையினா் மீது பொதுமக்கள் கற்கலை வீசினா். இதில் 3 காவலா்கள் காயமடைந்தனா். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, விரைவு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டு அவா்கள் உதவியுடன் போராட்டம் கலைக்கப்பட்டது. அப்பகுதியில் மேலும் பதற்றங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்றாா்.

போராட்டக்காரா்கள் மீது காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 2 போ் காயமடைந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவா், காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சந்தித்த பிறகு விவரங்களைத் தெரிவிப்பதாகக் கூறினாா்.