பேட்டியளிக்கும் கே.சி.வேணுகோபால். 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம்: கே.சி.வேணுகோபால்

மாநிலத்தில் மகா விகாஸ் அகாதி ஆட்சியமைக்கும் என கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம் என்றும் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024 இல் முடிவடைகிறது. இருப்பினும், இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் முன்னேற்பாடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் கட்சியை வலுப்படுத்தவும் விவாதம் நடந்தது. மகாராஷ்டிரத்தில் இருந்து இந்த ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம். இந்த அரசு இயற்கையான அரசு அல்ல.

மாநிலத்தில் மகா விகாஸ் அகாதி ஆட்சியமைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த யோசனைகள், திட்டமிடல் உள்ளது, ஆனால் தேர்தலில் நாங்கள் ஒன்றாகப் போராடுவோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிர மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள். இந்த ஊழல் அரசை தோற்கடிக்க நாங்கள் மிகவும் உறுதியுடன் இருக்கிறோம். அது வரும் நாட்களில் நடக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் தெளிவான செய்தி உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT