படம் | பிடிஐ
இந்தியா

எதிர்க்கட்சிகளுக்கு மக்களவை துணைத்தலைவர் பதவி - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்.

அனைத்துக்கட்சிக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

DIN

மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை(ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை(ஜூலை 23) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தொடரின்போது மத்திய அரசு 6 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 21) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

மத்திய அமைச்சரக்ள் ஜெ.பி. நட்டா, சிராக் பஸ்வான், அனுப்பிரியா படேல் உள்ளிட்டோரும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து ஜெய்ராம் ரமேஷ், கொடிக்குன்னில் சுரேஷ், கௌரவ் கோகோய், அசாதுதீன் ஓவைசி, சஞ்சய் சிங், சஞ்சய் ஜா, ராம்கோபால் யாதவ் உள்பட முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், மக்களவை துணைத் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டுமென்றும், நீட் தேர்வு வினாத்தாள் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது. அதே போல, ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால், ஆந்திரத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் அமைதியைக் கடைப்பிடித்திருந்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்

மேலும், இந்த கூட்டத்தில், அரசமைப்பு நிலைக் குழு, ஆலோசனைக் குழு ஆகியவற்றுக்கான முக்கியத்துவம் உரிய வகையில் அளிக்கப்பட வேண்டுமென்பதும், நெடுங்காலமாக எம்.பி.க்களால் நாடாளுமன்ற வளாகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘செண்ட்ரல் ஹால்’ எனப்படும் மத்திய அரங்கம் மீண்டும் பயன்பாட்டுக்காக திறக்கப்பட வேண்டுமென்பதும் ஒருமித்த கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT