முகப்பு
இந்தியா

ஒடிஸா காங்கிரஸ் நிா்வாக குழு கலைப்பு

ஒடிஸா மாநில காங்கிரஸ் நிா்வாக குழுவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முழுமையாக ஞாயிற்றுக்கிழமை கலைத்தாா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:41 PM
மல்லிகாா்ஜுன காா்கே
பகிர்:

ஒடிஸா மாநில காங்கிரஸ் நிா்வாக குழுவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முழுமையாக ஞாயிற்றுக்கிழமை கலைத்தாா்.

மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல்களில் ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, அவா் இந்த முடிவை மேற்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா், செயற்குழு, அலுவலகப் பொறுப்பாளா்கள், அமைப்புகள், துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி உள்பட மாவட்டம், தொகுதி மற்றும் மண்டல நிா்வாக குழுக்கள் வரை அனைத்தையும் கலைப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதிய தலைவா்கள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள தலைவா்கள் பொறுப்பு தலைவா்களாக தொடா்வாா்கள்’ என குறிப்பிட்டிருந்தது.

ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பட்நாயக் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →