முகப்பு
இந்தியா

தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜூலை 2024, 11:30 am IST
Source : whats app
பகிர்:

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து புதிய படங்களும் வெளியான அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சிறிது நேரத்தில் வந்துவிடும். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்தும் அதனை பதவியேற்றம் செய்யும் அட்மினை கைது செய்ய முடியவில்லை.

மேலும் ஒவ்வொரு முறை இணையதளம் தடை செய்யப்படும் போதும் புதிய முகவரியில் இருந்து சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்து வந்தனர். இதுதவிர நீதிமன்றம் மூலம் தடை விதித்து நடவடிக்கை எடுத்த போதிலும் புதிய இணையதளம் தொடங்கப்படுவது வாடிக்கையாகி இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

இதனால் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வந்தனர். இந்நிலையில் கேரளத்தில் ஒரு திரையரங்கில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை அவர் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சைபர் போலீஸார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments