முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

நவி மும்பையில் உள்ள நகைக்கடையில் ஹெல்மட் அணிந்தபடி நுழைந்த 3 பேர் கொண்ட குடும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 29 ஜூலை 2024, 12:13 pm IST
நகைக்கடையில் ஹெல்மட்டுடன் நுழைந்த 3 பேர்.
பகிர்:

தநவி மும்பையில் உள்ள நகைக்கடையில் ஹெல்மட் அணிந்தபடி நுழைந்த 3 பேர் கொண்ட குடும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஹெல்மட் அணிந்தபடி 3 பேர்கொண்ட கும்பல் நுழைந்தது. பின்னர் அதில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார். அப்போது கடையில் இருந்த அலாரத்தை இயக்க முயன்ற ஊழியரை அந்த கும்பல் தாக்கியது.

3 நிமிடங்களில் நகைகளை கொள்ளையடித்து விட்டு அவர்கள் அந்த இடத்தை விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அந்தநேரத்தில் உள்ளூர்வாசிகள் அந்த கும்பலை துரத்திப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நவி மும்பை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் தொடர்பாக நவி மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கருப்பு உடை அணிந்து, ரிவால்வர்களுடன் கடைக்குள் நுழைந்த மூவரும் ஊழியர்களை மிரட்டி, தாக்கி ரூ.11.80 லட்சம் மதிப்பிலான நகைகளை மூன்று நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றனர்.

அவர்கள் நான்கு முதல் ஐந்து சுற்றுகள் சுட்டனர், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.