முகப்பு
இந்தியா

‘ஃபெயில் மினிஸ்டர்’.. 2 மாதத்தில் 17 இந்தியர்கள் பலி: காங்கிரஸ்

தொடர் ரயில் விபத்து குறித்து காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.

Updated On : 30 ஜூலை 2024, 5:19 pm IST
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
பகிர்:

மும்பை - ஹெளரா விரைவு ரயில் தடம் புரண்டது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் அருகே இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

“மற்றொரு ரயில் விபத்து. ஆனால் ‘ஃபெயில் மினிஸ்டரின்’ விளம்பரம் மட்டும் தொடர்கிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 3 விபத்துகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இந்த விபத்துகளில் 17 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்களாக மத்திய ரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஸ்ணவ் பதவி வகிக்கும் நிலையில், இந்தாண்டில் மட்டும் 6 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில், 5 பயணிகள் ரயில் ஆகும்.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதத்தில் ஒரு விபத்தும், ஜூலையில் இரண்டு விபத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments