சிக்கிம் ஆளுநர் 
இந்தியா

சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!

16வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

PTI

சிக்கிமின் 16வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஸ்வநாத் சோமாத்தர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 72 வயதான மாத்தூர் சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த விழாவில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவில்..

பாஜகவின் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் செவ்வாய்க்கிழமை சிக்கிம் வந்தடைந்தார். அவருக்கு ஆளுநராக நியமனம் செய்வதற்கான கடிதத்தை ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் வி.பி. பதக் நேற்று வழங்கினார்.

இந்திய- திபெத்திய எல்லைக் காவலின் 13 வது பட்டாலியன் அவருக்கு மரியாதை அளித்தது.

மாத்தூர் பாஜகவில் சேருவதற்கு முன்பு ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ் பேச்சாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மாநில பாஜக தலைவராகவும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் வாகனம், டிப்பா் லாரி பறிமுதல்

பவானிசாகா் அருகே 200 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

SCROLL FOR NEXT