முகப்பு
இந்தியா

குஜராத்தில் பேருந்துகள் மோதல்: மூவர் பலி

குஜராத்தில் பேருந்துகள் மோதிக் கொண்டதில் மூவர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Updated On : 1 ஜூன், 2024 at 10:08 AM
- dot com
பகிர்:

குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் மாநிலப் போக்குவரத்து பேருந்து, பைக்கின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மாநிலப் போக்குவரத்து பேருந்து பைக்கின் மீது மோதியதுடன், எதிர்த்திசையில் வந்த வேறொரு சொகுசுப் பேருந்தின் மீதும் மோதியுள்ளது. இவ்விபத்தில் பைக் ஓட்டிச் சென்றவர் மற்றும் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த இரு பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மற்றும் இரு பேருந்துகளிலும் பயணித்த 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.