தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹாரில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ விபத்து நேரிட்டது.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, "தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, இன்று (ஜூன் 3) மாலை 4 மணியளவில் தகவல் வந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். எட்டு தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இவ்விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஜனவரி முதல் மே மாதம் வரை, தீ விபத்து தொடர்பாக சுமார் 8900 அழைப்புகள் வந்ததாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.