செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் மனு சிங்வி  
இந்தியா

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற காரணம் என்ன? என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற காரணம் என்ன? என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எனினும் பிற்பகலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதாக புகார் எழுந்தது.

தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்திலும், வாக்கு எண்ணிக்கை அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற்று வருவதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சிங்வி, இந்திய நாட்டின் மக்கள் புத்திசாலித்தனமானவர்கள். பத்திரிகையாளர்களோ அல்லது கருத்துக் கணிப்புகளோ அவ்வளவு புத்திசாலித்தனமாக இல்லை. எதிர்காலத்தை கணிப்பது மக்களை அவமதிக்கும் செயல்.

வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT