சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாசந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள தெலுங்கு தேசக் கட்சிக்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வாழ்த்து கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தார்.
ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனை கட்சி முதலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி மக்களவைத் தேர்தலிலும், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.