ராகுல் 
இந்தியா

ரே பரேலியில் ராகுல் காந்தி அசத்தல் வெற்றி!

ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி.

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் வெற்றி பெற்றுள்ளார். சோனியா காந்தி ஐந்து முறை எம்.பி.யாக இருந்த தொகுதியில் அவரது மகன் ராகுல் எம்.பி.யாகிறார்.

பாஜகவின் வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார்.

ரே பரேலி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் ராகுல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்துள்ளார். தினேஷ் பிரதாப் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்.

ரே பரேலி தொகுதியில் சோனியா 2004ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் மக்களவைக்குப் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிட்டு அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT