திருவனந்தபுரத்தில் வென்றார் சசி தரூர்!
திருவனந்தபுரத்தில் சசி தரூர் வென்றார்.
தென்னிந்திய மாநிலங்களில் கேரள மாநிலத்தில் இதுவரை பாஜக வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில், மொத்தமுள்ள 20 தொகுதிகளும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தோல்வியைத் தழுவினார்.
தேர்தல் ஆணையம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று கேரளத்தில் பாஜக தனது வெற்றிக்கணக்கை முதலில் தொடங்கியிருக்கிறது.