அப்துல் நஸீர் கோப்புப் படம்
இந்தியா

ஆந்திர பேரவையை கலைத்தார் ஆளுநர்!

ஆந்திர மாநிலத்தின் 15வது சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் அப்துல் நஸீர் கலைத்தார்.

DIN

ஆந்திர மாநிலத்தின் 15வது சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் அப்துல் நஸீர் கலைத்தார்.

ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதற்கு முன்னதாக அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்சியை கலைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

முதல்வரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், 15வது சட்டப்பேரவையை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவைக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 135 தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய உரிமையாளர்களின் அணிகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லையா?

வெஸ்டோன் கோப்பையை வென்ற மெஸ்ஸி மகன்..! வைரலாகும் ‘துப்பாக்கி வீரன்’ கொண்டாட்டம்!

வரம் தரும் வாரம்!

நைஜீரியாவில் கால்நடைகளுக்காக 33 பேரைக் கொன்ற ஆயுதக்குழு!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

SCROLL FOR NEXT