ஒடிசாவின் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த நவீன் பட்நாய்க்  ANI
இந்தியா

ஒடிசாவின் அடுத்த முதல்வர் யார்?

கட்சி பாராளுமன்றக் குழு விரைவில் முடிவு

DIN

ஒடிசாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சியின் பாராளுமன்ற குழு விரைவில் தீர்மானிக்கும் என அந்த மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஒடிசாவை சேர்ந்தவரே முதல்வராக்கப்படுவார் என மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாராளுமன்ற குழு விரைவில் முடிவெடுக்கும் மற்றும் ஒடியா (ஒடிசாவை சேர்ந்தவர்) ஒருவர் முதல்வராக பிரதமர் அறிவித்தபடி ஜூன் 10-ம் தேதி பொறுப்பேற்பார். முதல்வர் யாரென்பதை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சமல்

ஒடியா மொழியை பேசக் கூடிய, புரிந்துகொள்ளக் கூடிய மண்ணின் மைந்தரே ஆட்சி பொறுப்பேற்பார் என தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

தர்மேந்திர பிரதான், பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் பைஜயந்த் பாண்டா ஆகிய மூத்த பாஜக தலைவர்களின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக ஒடிசா மாநிலத்தில் தனித்து ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. முன்னதாக 2000 மற்றும் 2004-ல் பிஜு ஜனதா தளத்துடனான கூட்டணியில் பாஜக இடம்பெற்று ஆட்சி அமைத்தது.

முந்தைய அரசு கொண்டுவந்த பல நலதிட்ட திட்டங்கள் நீக்கப்பட்டு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பதிலீடு செய்யப்படும் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்

இளைஞரை நூதனமாக ஏமாற்றி ரூ.4.6 லட்சம் பணம் பறித்த இருவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் 2 போ் எம்பிபிஎஸ் படிப்புக்குத் தோ்வு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பால் உற்பத்தியாளா் சங்கத்துக்கு உடனடியாக தோ்தல் நடத்த மனு

யாசகம் எடுத்து வந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை - வட்டாட்சியா் அலுவலக ஊழியர் கைது

SCROLL FOR NEXT