உ.பி.யில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதல்: 8 பேர் பலி!
வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் கேசவ் சத்ரா கோஸ்வாமி கூறுகையில்,
இன்று அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திரும்பும்போது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிருடன் மணலில் புதைந்தனர். குடும்பத்தினரை மீட்க அப்பகுதியினர் மணலை அகற்ற முயன்றனர். ஆனால் அகற்ற முடியாத காரணத்தால் புல்டோசர் வரவழைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன.
இறந்தவர்கள் அவதேஷ் (40), அவரது மனைவி சுதா (35) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் லல்லா (5), சுனைனா (11) பட்டு (4) மற்றும் அவர்களது உறவினர் கரண் (35), அவரது மனைவி ஹீரா (30) அவர்களது மகள் கோமல் (5) ஆகியோர் ஆவார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு ஐந்து வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.