முகப்பு
இந்தியா

பாஜகவின் வெறுப்பு அரசியலை அயோத்தி மக்கள் நிராகரித்துவிட்டனர்! -அகிலேஷ் யாதவ்

அயோத்தியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாஜகவின் வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Updated On : 12 ஜூன் 2024, 7:58 pm IST
பகிர்:

பைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மாநில தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், “பாஜக முறைகேடாக வாக்குச் சேகரிப்பில் இடுபட்ட போதிலும், பொதுமக்கள் சமாஜ்வாதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பைசாபாத் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அயோத்தியில் பெற்ற சமாஜவாதி கட்சியின் வெற்றி, பாஜகவின் பிரிவினைவாத வெறுப்பு நிறைந்த அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். பொதுமக்களின் ஆதரவு அரசியலுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அனைவரும் வியக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பைசாபாத் தொகுதியில் நமது சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்தார். மக்களவைத் தேர்தலில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெறவைத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சியை மாநில மக்கள் உருவாக்கியுள்ளனர். மக்களவையில் பொதுமக்களின் பிரச்னைகளை சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் கடுமையாக எழுப்புவார். பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதாளச் சாக்கடைக்குச் சென்று கொண்டிருக்கிறது. பணவீக்கமும் வேலையின்மையும் உச்சத்தில் இருக்கிறது” என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments