இந்தியா

ரூ.2 கோடி வைரங்களை துபைக்கு கடத்த முயன்றவர் கைது!

ரூ.2 கோடி வைரங்களுடன் துபை செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

DIN

சூரத் விமான நிலையத்தில் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வைரங்களை மறைத்து வைத்திருந்ததாக துபை செல்லும் இந்தியப் பயணி ஒருவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சஞ்சய்பாய் மொராடியா என்ற அந்தப் பயணி இண்டிகோ ஏர்லைன்ஸ் சர்வதேச விமானத்தில் துபை செல்வதற்கு முன், சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அந்தப் பயணி முதலில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து முழு உடலையும் சோதனை செய்ததில், அவரது சூ சாக்ஸ் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்த 1,092 கிராம் மெருகூட்டப்படாத வைரங்களை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், விசாரணைக்காக பயணி சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வைரங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2.19 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 12-இல் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

புதுச்சேரி தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் தவிா்த்து மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை

கூட்டணி! தமிழக நிலையே புதுச்சேரியிலும் தொடர வேண்டும்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி

தீ விபத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

திண்டிவனம் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம்: முதல்வா் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா்!

SCROLL FOR NEXT