FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைந்த ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள்!

ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிரண் சௌத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சௌத்ரி பாஜகவில் இணைந்தனர்.

Updated On : 19 ஜூன் 2024, 11:35 am IST
பகிர்:

ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிரண் சௌத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சௌத்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

கிரண் சௌத்ரி மற்றும் ஸ்ருதி சௌத்ரி இருவரும் செவ்வாயன்று காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

கிரண் சௌத்ரி ஹரியாணா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகள் மற்றும் பிவானி மாவட்டத்தில் உள்ள தௌஷம் தொகுதியின் எம்எல்ஏவாகவும், ஹரியாணா முன்னாள் பிரிவின் செயல் தலைவராக இருந்தார்.

Advertisement

Advertisement

பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments