FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தின் புதிய அமைச்சர்!

கே. ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக புதிய அமைச்சராக ஓ.ஆர்.கேலு தேர்வு.

Updated On : 20 ஜூன் 2024, 7:02 pm IST
கேரளத்தில் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஓ.ஆர்.கேலு - (கோப்பு படம்)
பகிர்:

கேரளத்தில் புதிய அமைச்சராக மானந்தவாடி எம்எல்ஏ ஓ.ஆர்.கேலு பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினர், தேவஸ்வம் போர்டு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த கே. ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக வயநாட்டில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 54 வயதான ஓ.ஆர்.கேலு பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி முன்னணி அமைச்சரவையில் ஓ.ஆர்.கேலுவை அமைச்சராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறும் ஓ.ஆர்.கேலுவின் பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் ஆரிப் முகமது கானிடம், முதல்வர் அலுவலகம் கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கேலுவுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) இலாகா கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், ராதாகிருஷ்ணன் வகித்து வரும் சில இலாகாக்களில் சிறு குளறுபடிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஓ.ஆர்.கேலு கூறுகையில், “நான் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்துகொள்கிறேன். எனவே, இந்த சமூகங்களுக்கான கட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே எனது முயற்சியாக இருக்கும். வயநாட்டைச் சேர்ந்தவர் என்ற முறையில், மாவட்டத்தில் நிலவும் நாள்பட்ட பிரச்னையான மனித-விலங்கு மோதல் போன்ற பிரச்னைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்றார்.

குறிச்சிய சமூகத்தில் பிறந்த கேலு, அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்புடன் வளர்ந்தார். மேலும், மானந்தவாடி தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments