கேரள ரயில் நிலையத்தில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை: பயணி அதிர்ச்சி!
கேரள ரயில் நிலையில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த பயணி ஒருவர் ஷோரனூர் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வடையுடன் சட்னி வாங்கியுள்ளார்.
ஆனால் வடையை வாங்கிப் பார்த்த பயணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இறந்த நிலையில் கிடந்த தவளையைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
உடனே இதுகுறித்து அவர் புகார் செய்துள்ளார். புகாரைத் தொடர்ந்து அந்த கடைசியில் ரயில்வே துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
சோதனைக்கு பிறகு ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.