பஞ்சாபில் மகள், தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டத்தில் உள்ள ராம் ராஜ்ய காலனியில் வசித்து வந்தவர் குல்பீர் மன் சிங். இவர் உரிமம் பெற்ற துப்பாக்கியால் நேற்று மாலை தனது 21 வயது மகள் நிம்ரத் கௌரை திடீரென சுட்டுக்கொன்றார்.
பின்னர் அவரது தாயார் பல்வந்த் கௌர் (85) மற்றும் வளர்ப்பு நாயையும் சுட்டுக்கொன்று தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்பு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குல்பீர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் குல்பீரின் மகள் நிம்ரத் கனடாவிலிருந்து திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.