முகப்பு
இந்தியா

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய கேரளப் போக்குவரத்துக் கழகம்!

கேரளப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கியுள்ளது.

Updated On : 26 ஜூன், 2024 at 11:18 AM
பகிர்:

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தனது முதல் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் புதன்கிழமை திறந்துள்ளது.

அணையாறில் உள்ள கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஸ்விப்ட் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதியை முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் தனியார் ஓட்டுநர் பள்ளிகளைவிட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனப் பயிற்சிக்கான கட்டணம் 40 சதவீதம் குறைவாகும். காம்போ சலுகையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் கற்க ரூ.11,000 மட்டுமே வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் கார் ஓட்ட மட்டும் கற்றுக்கொள்ள விரும்பினால், அதன் கட்டணம் ரூ.9,000 மற்றும் இருசக்கர வாகனப் பயிற்சிக்கு, 3,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பயிற்சிப் பள்ளியை துவக்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “பட்டியல் பழங்குடி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. தனியார் நிறுவனங்களின் அதிகவிலையில் கற்றுக்கொடுக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவர, மாநிலம் முழுவதும் 23 ஓட்டுநர் பள்ளிகளைத் திறக்க கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு அருகிலேயே இயக்கப்படும். மாநிலப் பொதுத்துறை நிறுவனம் கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை வாங்கும் வகையில், வருங்கால ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →