சிறுவன் ரன்வீர் பார்தி 
இந்தியா

ஒருநாள் ஐபிஎஸ் ஆன மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவன்!

வாரணாசியில் மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை காவல்துறையினர் ஒருநாள் ஐபிஎஸ் ஆக்கியுள்ளனர்.

DIN

வாரணாசியில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் ஆகும் கனவை நிறைவேற்ற, அச்சிறுவனை ஒரு நாள் ஐபிஎஸ் ஆக்கி காவல்துறையினர் நெகிழ வைத்துள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியிலுள்ள ரன்வீர் பார்தி என்கிற 9 வயது சிறுவன் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு மஹாமன புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

அந்தச் சிறுவனுக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. எனவே, அதனை நிறைவேற்றும் விதமாக வாரணாசி காவல்துறையினர் சிறுவனை ஒரு நாள் ஐபிஎஸ் ஆக்கி, அவரை ஐபிஎஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்துள்ளனர். இந்த நிகழ்வு வாரணாசி காவல்துறை சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது

அந்தப் பதிவில், காக்கி உடை அணிந்த அந்தச் சிறுவனிடம் காவல்துறை அதிகாரிகள் உரையாடுவது போலவும், கைகுலுக்குவது போலவும் காணொளி பதிவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவன் ரன்வீருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், அவனது கனவினை நிறைவேற்றியதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் - அப்பாவு!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா! | செய்திகள்: சில வரிகளில் | 21.11.25

பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்

Mask movie review - சாலிகிராமத்தின் Money Heist! | Kavin

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT