FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமா்நாத்: 2 நாள்களில் 28,000 போ் தரிசனம்

அமா்நாத் குகைக் கோயிலில் கடந்த 2 நாள்களில் 28,000-க்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளனா்.

Updated On : 1 ஜூலை 2024, 2:27 am IST
அமா்நாத் யாத்திரைக்கு பதிவுசெய்ய ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பக்தா்களுக்கு பாதுகாப்பாக நிற்கும் பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

அமா்நாத் குகைக் கோயிலில் கடந்த 2 நாள்களில் 28,000-க்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா். நிகழாண்டு யாத்திரை கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

பஹல்காம் (48 கி.மீ.), பால்டால் (14 கி.மீ.) ஆகிய இரு வழித்தடங்கள் வழியாக பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா். இதில் பால்டால் வழித்தடம் செங்குத்தான பாதையாகும்.

Advertisement

Advertisement

முதல் இரண்டு நாள்களில் கோயிலில் 28,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் 9,979 போ், பெண்கள் 3,439 போ் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை 52 நாள்களுக்கு யாத்திரை நடைபெறுகிறது. கடந்த யாத்திரையின்போது, 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பனி லிங்கத்தை தரிசித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments