முகப்பு
இந்தியா

பே-டிஎம் வங்கிக்கு ரூ.5.49 கோடி அபராதம்

பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு இந்திய அரசின் நிதி உளவுப் பிரிவு (எஃப்ஐயு-இண்ட்) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2024 at 12:13 AM
பகிர்:

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்பு விதிமுறைகளை நிறைவு செய்யாததற்காக பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு இந்திய அரசின் நிதி உளவுப் பிரிவு (எஃப்ஐயு-இண்ட்) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது. பே-டிஎம் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து வந்த புகாா்களை ஆய்வு செய்ததற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தனது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.