முகப்பு
இந்தியா

குடிமக்களுக்கு இடையூறாக இருந்த 1,550 சட்டங்கள் நீக்கம்!

குடிமக்களுக்கு இடையூறாக இருந்த, காலத்துக்கு ஒவ்வாத 1,550 சட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீக்கியுள்ளது

Updated On : 3 மார்ச், 2024 at 4:08 AM
மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்
பகிர்:

குடிமக்களுக்கு இடையூறாக இருந்த, காலத்துக்கு ஒவ்வாத 1,550 சட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீக்கியுள்ளது என்று மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் நடைபெற்ற பிராந்திய தொழில்கள் மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேக்வால் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை 1,550 தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளது. காலத்துக்கு பொருந்தாத இந்த சட்டங்கள் மக்களுக்கும், தொழில் நடத்துவோருக்கும் இடையூறாகவே இருந்தன. ஒருகாலத்தில் தொழிலாளா்களுக்கு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொழில் நிறுவன கட்டடங்களுக்கு உரிய கால இடைவெளியில் வெள்ளையடிக்க (சுண்ணாம்பு பூச) வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதுபோன்ற சட்டங்கள் இப்போது தேவையில்லாதவை; எனவே, நீக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீா்க்க தனியாக வா்த்தகத் தீா்வு நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளன. உரிய விதிகளை வகுத்து மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களுக்கு பல்வேறு சட்ட அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா் அவா்.

Advertisement