முகப்பு
இந்தியா

தேர்தல் பத்திரம்: ஸ்டேட் வங்கி மனு மீது வரும் 11-ல் விசாரணை!

எஸ்பிஐ மனு விசாரணை: தேர்தல் நிதி பத்திர விவரங்கள் வெளியீட்டிற்கு காலக்கெடு நீட்டிப்பு கோரிக்கை!

Updated On : 8 மார்ச், 2024 at 1:04 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு கோரிய மனு, உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வில் மார்ச் 11-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஸ்டேட் வங்கி வேண்டுமென்றே நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக ஏடிஆர் தொடர்ந்த தனி வழக்கையும் அதே நாளில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளது.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் சட்டவிரோதமானது எனக்கூறி தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை தடை செய்வதாக கடந்த பிப்.15ஆம் தேதி உத்தரவிட்டது.

Advertisement

மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு மத்தியில் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 4) கோரிக்கை விடுத்தது.

காலக்கெடு கோரிய மனுவில் ஸ்டேட் வங்கி, தகவல்களை மீட்டெடுப்பதும் தொடர்புடைய ஒன்றுடன் ஒன்றைப் பொருத்துவதும் காலம் எடுக்க கூடிய செயல் எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments