இந்தியா

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

தில்லி கேஷப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

DIN

தில்லியின் கேஷப்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 40-50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தில்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தில்லி காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த இடத்துக்கு இணையாக மற்றொரு பள்ளத்தைத் தோண்டி மீட்புப் பணியை தொடர்வோம்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT