இந்தியா

மும்பை விமான நிலையத்தில் 2.99 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

மும்பை (மகாராஷ்டிரா): மும்பை விமான நிலையத்தில் ரூ.1.72 கோடி மதிப்புள்ள 2.99 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய ஐந்து வெவ்வேறு சோதனைகளில் ரூ.1.72 கோடி மதிப்புள்ள 2.99 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, மும்பை விமான நிலையத்தில் மார்ச் 10 முதல் 12 வரை எட்டு வெவ்வேறு சோதனைகளில் ரூ.2.35 கோடி மதிப்புள்ள 4.22 கிலோ தங்கம், செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றை மும்பை சுங்கத்துறை கைப்பற்றியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது -சசி தரூர் கணிப்பு

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

SCROLL FOR NEXT