இந்தியா

பொருந்தா உணவு சாப்பிட்டதைக் கண்டித்த தந்தை: மகள் எடுத்த விபரீத முடிவு

பொருந்தா உணவுகளை சாப்பிடுவதைக் கண்டித்த பெற்றோருக்கு மகள் கொடுத்த அதிர்ச்சி..

DIN

மகாராஷ்டிரத்தின், நாக்பூரில் பொருந்தா உணவுகளை(ஜங் ஃபுட்) சாப்பிட்ட மகளைக் கண்டித்ததால் மனமுடைந்து மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரின் சிந்தி காலனி பகுதியில் வசிப்பவர் பூமிகா வினோத் தன்வானி(19). இவர் இளங்கலை படித்து வந்தார்.

பூமிகாவுக்கு தைராய்டு பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில், பொருந்தா உணவு(ஜங்க் ஃபுட்) சாப்பிடும் பழக்கமுள்ள அவரை தன் தந்தை சாப்பிடக்கூடாது எனக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, இன்று காலை பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT