தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை, வியாழக்கிழமை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை உத்தரவு பெற்றிருப்பதாகவும் மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தேடுதல் நடத்தப்படுவதாகவும் முதல்வரின் பணியாளர்களிடம் அமலாக்கத்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு அவற்றை அரவிந்த் கேஜரிவால் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.