சுனிதா கேஜரிவால்
சுனிதா கேஜரிவால்  
இந்தியா

அமலாக்கத் துறை அலுவலகத்தில் கேஜரிவால் மனைவி!

DIN

விசாரணைக் காவலிலுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருகைபுரிந்தார்.

சமீபத்தில் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதம் குறித்து காணொளி வாயிலாக சுனிதா கேஜரிவால் உரையாற்றியிருந்தார்.

சிறையிலிருந்தவாறு முதல்வர் பொறுப்புகளை கவனித்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு துறை வாரியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில், அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரின் மனைவி சுனிதா, தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருகைபுரிந்தார்.

தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, மார்ச் 27ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT