கேஜரிவாலின் மனைவி சுனிதா 
இந்தியா

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

கேஜரிவாலுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்திய சுனிதா.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள தனது கணவருக்கு ஆதரவளிக்குமாறு மக்களை சுனிதா வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுடன் சந்திப்பில், தனது கணவர் நாட்டில் உள்ள ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளதாகவும், மக்கள் தங்கள் ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் மூலம் அவரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வாட்ஸ்ஆப் எண்ணை வெளியிட்ட அவர் - 8297324624 ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு மக்கள் அனுப்பும் ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் அல்லது வேறெதேனும் செய்திகளையும் அனுப்பலாம். கட்சியினர் அவர்களுக்குத் தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT