இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...
இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,280 அடிக்கு கீழ் சென்றால் மூலமட்டத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது.
கொச்சி: கோடை வெப்பம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இடுக்கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகின்றது.
அணையின் மொத்த கொள்ளளவில் 35 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 2,337 அடியாக உள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யபட்டதால் அணையின் நீர்மட்டம் 2,330-ஆக இருந்தது. ஆனால், நிகழ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும் அணையின் நீர்மட்டம் 2,337 அடியாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், அணையின் நீர்மட்டம் 2,280-க்கும் குறைவாக சென்றால் குழாய் வழியாக மூலமட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க மூலமட்டத்தில் உள்ள 6 மின்சார உற்பத்தி கலன்களில் 5-ஐ மட்டுமே கேரள மின்வாரியம் உபயோகித்து வருகின்றது. உற்பத்திக்கு பிறகு 45.349 மீட்டர் அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
மேலும், அதிக மின்நுகர்வு ஏற்பட்டால் மாற்று முறைகளை பின்பற்ற கேரள அரசுடன் மின்வாரியம் ஆலோசித்து வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.