இந்தியா

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ராகுல் காந்தி ரே பரேலியில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று(மே. 3) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடன் இருந்தனர்.

உத்தர பிரதேசத்தின் அமேதி, ரே பரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மே 3) முடிவடைய இருந்த நிலையில், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று(வெள்ளிக்கிழமை) காலை அறிவித்தது.

கடந்த தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். எனவே, இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.

ரே பரேலி தொகுதியில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் பாவை.. ராஷ்மிகா மந்தனா!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT