பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜிநாமா
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தன்னுடைய ஆதரவு நிறுவனத்திற்கு தொடர்ந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது ராஜிநாமா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் மேலும் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சார்ந்த சேவைகளை மார்ச் 15 முதல் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.