இந்தியா

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

DIN

உத்தரகண்ட் மாநிலம் டேஹ்ராடூன் மாவட்டத்தில் கார் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இந்த சம்பவம் உத்தரகண்டின் ஜாதிபானி சாலையில் உள்ள முசோரி டெஹ்ராடூன் மார்க்கில் உள்ள பானிவாலா பேண்ட் அருகே நடைபெற்றது.

விபத்து தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் கூறுகையில், கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மாணவி ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த நான்சி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

டெஹ்ராடூன் ஐஎம்எஸ் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள், 2 மாணவிகள் உள்பட 7 பேர் சுற்றுலா செல்வதற்காக முசோரிக்குச் சென்று டெஹ்ராடூனுக்கு திரும்பும்போது கார் ஓட்டுநரின் நிலைதடுமாறி அருகிலிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுதொடர்பாக போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

SCROLL FOR NEXT