முகப்பு
இந்தியா

லாலு பேச்சுக்கு ஜேடியூ கண்டனம்

Updated On : 7 மே, 2024 at 8:42 PM
பகிர்:

புது தில்லி: முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள லாலு பிரசாத்தின் பேச்சு, மண்டல் ஆணையத்தின் அடிப்படை கருத்தை மீறுகிறது என பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பிகாா் தலைநகா் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் முஸ்லிம் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்தாா். அவரின் இந்த பேச்சு அரசியலமைப்புச் சட்டத்தின் சாரம்சத்தையும் மண்டல் ஆணையத்தின் அறிக்கையையும் மீறுகிறது என ஜேடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பேச்சு சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இடஒதுக்கீட்டை பெறுபவா்களுக்கு எதிராக உள்ளது என ஜேடியூ செய்தி தொடா்பாளா் கே.சி.தியாகி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘மண்டல் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தக் கோரி போராடிய முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் இவ்வாறு கூறி இருப்பது வருத்தமளிக்கிறது. சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள், ஜாதி அடிப்படையில் பிளவுபட்டுள்ள அனைவருக்குமான இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. எனவே மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை நீட்டிக்கக் கூடாது. இடஒதுக்கீட்டு சலுகைகளை நீட்டிப்பதற்கு மதம் ஒா் அளவுகோலாக இருக்க முடியாது’ என்றாா்.