ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் பள்ளிகளுக்கு விரைந்து சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி முழுக்க சோதனை நடத்தி வருகின்றனர்.
மறுபக்கம், மின்னஞ்சல் முகவரி யாருடையது, எங்கிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என பொதுவிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.