சம்பவ இடம் ஐஏஎன்எஸ்
இந்தியா

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

ஆந்திர வாக்குப்பதிவு பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்

DIN

ஆந்திர பிரதேசத்தில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. சந்திரகிரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் மீது செவ்வாய்க்கிழமை திருப்பதியில் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெளடிகளை ஏவிவிட்டதாக ஒய்எஸ்ஆர் கட்சி மீது தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் புலிவர்த்தி வெங்கட மணி பிரசாத், பத்மாவதி மஹிலா பல்கலைக்கழகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு திரும்பி வரும் வழியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு அருகே அவரின் காரை, மர்ம கும்பல் ஒன்று இரும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. வேட்பாளரின் பாதுகாவலர்கள் உள்பட இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர பிரதேசத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை முடிவுற்ற நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT