இந்தியா

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்!

DIN

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே சிந்தியா உடல்நலக் குறைவால் இன்று(மே15) காலமானார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக தில்லி உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் இன்று காலை 9.30 மணியளவில் ராஜே சிந்தியா காலமானதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராஜே சிந்தியாவின் உடல், தில்லியில் உள்ள இல்லத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், பின்னர் அவரது சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியருக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் ராஜே சிந்தியா நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு! துரோகத்தை வரலாறு மறக்காது! - காங்கிரஸ்

காஞ்சிபுரத்தில் ரூ. 254 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

SCROLL FOR NEXT