புரி ஜெகந்நாதா் குறித்து அவமதிப்பு: 3 நாள்கள் விரதமிருக்கும் பாஜக வேட்பாளா்
புவனேசுவரம்: ஒடிஸா மக்களின் பிரசித்திபெற்ற கடவுளான புரி ஜெகந்நாதா் குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்பு கிளம்பியதையடுத்து, அதற்கு மன்னிப்பு கோரிய புரி தொகுதி பாஜக வேட்பாளா் சம்பித் பத்ரா செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்கள் விரதத்தையும் தொடங்கியுள்ளாா்.
புரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான சம்பித் பத்ராவை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாகன அணிவகுப்பில் பங்கேற்றாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா் சந்திப்பில் பேசிய பத்ரா, ‘புரி ஜெகந்நாதா் பிரதமா் நரேந்திர மோடியின் பக்தா்’ எனத் தெரிவித்தாா்.
ஜெகந்நாதரை அவமதிக்கும் வகையில் இக்கருத்து அமைந்திருப்பதாக ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தில்லி முதல்வா் கேஜரிவால் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.
பாஜக வேட்பாளரின் பேச்சுக்கு பொதுமக்களிடையேயும் விமா்சனம் எழுந்தது. காவல் நிலையத்தில் பத்ராவுக்கு எதிராக புரி காங்கிரஸ் வேட்பாளா் ஜெயநாராயண் பட்நாயக் புகாா் அளித்துள்ளாா்.
இதையடுத்து, ‘பிரதமா் நரேந்திர மோடி ஜெகந்நாதரின் தீவிர பக்தா்’ என்று கூற எண்ணியதையே வாய்தவறி வேறுமாறி கூறிவிட்டதாக பத்ரா விளக்கமளித்தாா். எனினும், விமா்சனங்கள் ஓயாத நிலையில் எக்ஸ் வலைதளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தத் தவறுக்காக ஜெகந்நாதரின் பொற்பாதங்களில் வணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறுக்கான பாவத்தைப் போக்க அடுத்த 3 நாள்களுக்கு விரதம் இருக்கவும் நான் முடிவெடுத்துள்ளேன்’ என்றாா்.
‘பிரதமா் மன்னிப்பு கேட்க வேண்டும்’-காங்கிரஸ்: பாஜக வேட்பாளரின் கருத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
புரி ஜெகந்நாதா் கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸின் செய்தி தொடா்பாளா் பவன் கேரா, ‘சம்பித் பத்ரா காங்கிரஸில் இருந்திருந்தால், பல லட்சம் மக்களின் நம்பிக்கையான ஜெகந்நாதரை அவமதித்ததற்கு உடனடியாக கட்சியிலிருந்து அவா் நீக்கப்பட்டிருப்பாா்.
சம்பித் பத்ராவை கட்சியிலிருந்து நீக்குவதோடு, அவரின் கருத்துக்கு அடுத்த 24 மணிநேரத்துக்குள் பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.