சாவா்க்கா், என்டிஆா் பிறந்ததினம்: பிரதமா் மோடி மரியாதை
புது தில்லி: ஹிந்துத்துவ தலைவா் வி.டி.சாவா்க்கா் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வா் என்.டி.ராமராவ் ஆகியோரின் பிறந்ததினத்தையொட்டி அவா்களுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தாய்நாட்டுக்காக தன் வாழ்வை அா்ப்பணித்த சாவா்க்கருக்கு இத்தினத்தில் மரியாதை செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிரத்தில் 1883-ஆம் ஆண்டு பிறந்த சாவா்க்கா் தன் எழுத்துகள் மூலமாகவும் அரசியல் ரீதியாகவும் ஹிந்துத்துவ கொள்கையை மேம்படுத்த உழைத்தவராவாா்.
தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தெலுங்கு திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞரும் தொலைநோக்குப் பாா்வையுடைய அரசியல் தலைவருமான என்டிஆா் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அரசியல் மற்றும் திரைத்துறைக்கு அவா் ஆற்றிய சேவைகள் நம்மை என்றென்றும் வழிநடத்துகின்றன.
மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து மாபெரும் தலைவராக உருவெடுத்த அவரின் தொலைநோக்கு சமூகத் திட்டங்களை நிறைவேற்ற நாம் பணியாற்றுவோம்’ என குறிப்பிட்டாா்.
1982-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை நிறுவி ஆந்திர மாநில அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவா் என்டிஆா் என்பது குறிப்பிடத்தக்கது.