முகப்பு
இந்தியா

ஆப்கன் எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி, 9 பேர் காயம்!

எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்துப் பற்றி..

Updated On : 4 நவம்பர் 2024, 11:44 am IST
தீ விபத்து
பகிர்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

காபூல் நகருக்கு மேற்கே உள்ள பக்மான் மாவட்டத்தில் உள்ள கலா-இ-ஹைதர் கான் பகுதியில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இயற்கை பேரிடர் மற்றும் தீயணைப்பு துறையின் தலைவர் கூறுகையில்,

Advertisement

Advertisement

இந்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 9 பேர் காயமடைந்தனர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது, மேலும் அருகிலுள்ள சந்தைகளுக்கு தீ பரவுவதை தீயணைப்பு வீரர்கள் தடுத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகின்றது. இழப்புகள் குறித்து இன்னும் மதிப்பிடவில்லை. மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments