பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல்: 4 பேர் காயம்!
டிரோன் தாக்குதலில் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டது பற்றி..
பாகிஸ்தானில் ஆப்கன்-தலிபானின் டிரோன் தாக்கப்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ராணுவத்தின் ஊடகப் பிரிவான இனடர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் தகவலின்படி,
இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களிடையே அச்சத்தைத் தூண்டுவதையும், ஆப்கான் தலிபான்களை இயக்கும் பயங்கரவாத மனநிலையை நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன.
தலைநகர் இஸ்லாமாபாத்தை ஒட்டியுள்ள குவெட்டா கோஹட் மற்றும் ராவல் பிண்டியில் வெள்ளிக்கிழமை டரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
டிரோன்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே அவை அழிக்கப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த டிரோன் தாக்குதலில் குவெட்டாவில் இரண்டு குழந்தைகளும், கோஹட் மற்றும் ராவல்பிண்டியில் தலா ஒருவரும் காயமடைந்தனர்.
ஒருபுறம் ஆப்கன் தலிபான் உலகளாவிய அனுதாபத்தைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களாகத் திட்டமிடுகிறார்கள். மறுபுறம் பயங்கரவாத முகவர்கள் மற்றும் அவர்களின் டிரோன்கள் மூலம் பொதுமக்களை தீவிரமாக குறிவைக்கின்றனர் என தெரிவித்தனர்.